சென்னை: அர்ச்சகரை தரக்குறைவாக நடத்திய செயல் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து இந்து அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை: சென்னை, பெசன்ட்நகர், மகாலட்சுமி கோயிலில் பணிபுரிந்து வரும் செயல் அலுவலர், அர்ச்சகர்களை தரக்குறைவாக நடத்துவதாக புகார் வந்தது. இதையடுத்து செயல் அலுவலரை பணியிடமாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை, பெசன்ட்நகர், மகாலட்சுமி கோயில் செயல் அலுவலர் சந்திரசேகரன், சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ராஜா இளம்பெரும்வழுதி பெசன்ட்நகர், மகாலட்சுமி கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.