பாமக வலிமையாக உள்ள 121 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிக்காக உழைக்க வேண்டும்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கடிதம்: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் போராடி வருகிறோம். நமது போராட்டத்துக்கு இப்போதுதான் முதல்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசாணையாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதுதான் அந்த முதற்கட்ட வெற்றி. அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதுதான் அந்த கட்சிக்கு பாட்டாளி சொந்தங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும். நம்மைப் பொறுத்தவரை நாம் வலிமையாக உள்ள 121 சட்டப்பேரவை தொகுதிகளையும் வென்றெடுத்து தர வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை நாம் இன்றே தொடங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: