டிஸ்பூர்: அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்டம் ஒன்றில் தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து பிரியங்கா காந்தியும் உற்சாகமாக தேயிலை பறித்தார். அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 27ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதனால் அசாமில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் மாணவர் கூட்டங்களில் உற்சாகமாக பங்கேற்று இளைஞர்களின் ஆதரவை பெற்று வருகிறார். இந்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அசாம் சென்ற ராகுல்காந்தி சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா, தேயிலை தோட்டம் ஒன்றில் சாதாரணமான வேலையாள் போன்று தேயிலை பறித்தார்.