வேலை கிடைக்காத விரக்தியில் ஆசிட் குடித்து இன்ஜினியர் தற்கொலை

ஆவடி: ஆவடி திருவள்ளூர் நகர் அன்பர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(31). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். திருமணமாகவில்லை. இதற்கிடையில், சுரேஷ் பல்வேறு நிறுவனங்களுக்கு வேலை கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தார்.  ஆனாலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும், சுரேஷிக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனாலும், சரியான பெண் அமையவில்லை. இதனால், அவர் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுரேஷ் வீட்டு படுக்கையறையில் தூங்கி உள்ளார். பின்னர், அவர் காலையில் வெகுநேரமாகியும் எழுந்து  வரவில்லை. இதனையடுத்து, பெற்றோர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.  அங்கு  சுரேஷ், வாந்தி எடுத்து  இறந்து கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் அவரது சடலத்தை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். தகவலறிந்து, ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வேலை கிடைக்காததாலும், திருமணம் ஆகாததாலும் ஏற்பட்ட விரக்தியால் சுரேஷ் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories: