குளித்தலை : குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயிலில்17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 24ம் தேதி பகல் பல்லக்கு இரவு சுவாமி இந்திர விமானத்தில் வீதி உலா,25ம் தேதி பகல் பல்லக்கு இரவு குதிரை வாகனம் வேடுபரி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று ரதா ரோகனம் காலை 5.30 மணிக்கு மேல் 6 .30 மணிக்குள் நடைபெற்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு மேல் நடைபெற்றது.