தங்கம்மாள் ஓடை நடைபாதையில் இடையூறாக உள்ள மின்கம்பங்கள்

உடுமலை : உடுமலை தங்கம்மாள் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அங்கிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு மாற்று இடம் வழங்கப்பட்டது.ஓடையையொட்டி நடைபாதை மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன. ஆனால் நடைபாதையின் நடுவில் பல இடங்களில் மின்கம்பங்கள் உள்ளன. இதனால் நடந்து செல்வோருக்கு இடையூறாக உள்ளது.

தேரோட்டம் நடைபெறும்போது மக்கள் நடைபாதையில் திரண்டு நிற்பார்கள். அதற்கு மின்கம்பங்கள் இடையூறாக உள்ளன. எனவே, நடுவில் உள்ள மின்கம்பங்களை ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: