உடுமலை : உடுமலை தங்கம்மாள் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அங்கிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு மாற்று இடம் வழங்கப்பட்டது.ஓடையையொட்டி நடைபாதை மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன. ஆனால் நடைபாதையின் நடுவில் பல இடங்களில் மின்கம்பங்கள் உள்ளன. இதனால் நடந்து செல்வோருக்கு இடையூறாக உள்ளது.