கோவை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் நேற்று அளித்த பேட்டி: பட்டியல் பிரிவில் இருந்து 6 உட்பிரிவுகளை ஒன்றாக்கி, தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கவேண்டும், பட்டியல் பிரிவில் இருந்து இந்த உட்பிரிவுகளை விலக்கவேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், வெறும் பெயர் மாற்றம் மட்டும் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது போதாது. மத்திய அரசின் அறிவிப்பு வெறும் அடையாளம் மட்டுமே. எங்களுக்கு அங்கீகாரம் வேண்டும். இதுதொடர்பாக, கோவை வந்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.