சென்னை: தீரன் சின்னமலை படைத்தளபதி வீரன் பொல்லானுக்கு சிலையுடன் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஈரோடு மாவட்டத்தில் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு வீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என கூறியுள்ளது. வீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என நாமக்கல் மாவட்டத்தில் பிப்.15-ல் முதல்வர் அறிவித்திருந்தார்.