தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் அறிக்கை -  26.2.2021

    

சென்னை பெருநகர காவல், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. மோகன்ராஜ்; புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செல்வி ரா. சரளா; தேனாம்பேட்டை காவல் நிலையக் குற்றப்பிரிவில் முதல் நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த திருமதி ஆ. சத்யா;  நீலாங்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. கிரி; புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. த. ரமேஷ்; ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பிரேம் கோபால்; தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. பி. வெங்கடேஷ்; புனித தோமையர் மலை  காவல் நிலையக் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. இரா. பாண்டியன்; செங்குன்றம் காவல் நிலையப் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. செ. சண்முகம்;  பெரியமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. லோ. சீனிவாசன்;

 

சென்னை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ரா. விஜயன் பிள்ளை;     சென்னை, வெடிபொருள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. செல்வம்;    கோயம்புத்தூர் மாநகரம், ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. தி. முருகேசன்; செல்வபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ரா. தங்கதுரை; தருமபுரி மாவட்டம், பெரும்பாலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ல. ஸ்டாலின்;  கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பா. ராஜா ராமச்சந்திரன்;

    

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. செ. ராஜஸ்டீபன்;மதுரை மாநகரம், அண்ணா நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பொ. சுந்தரராஜன்; திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. க. ராஜேந்திரன்; திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பெ. மலர்சாமி; நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ரா. குரூமுர்த்தி;  பெரம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. து. இராஜசேகரன்;

    

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. வாசுதேவன்;சேலம் மாநகரம், நுண்ணறிவுப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. அ. நடராஜன்;  திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ராஜா;  மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. நூர் முகமது;  திருச்சிராப்பள்ளி மாநகரம், அரியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஜாபர்கான்;  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சி. சுதா; மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ம. பரத்;  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. இளமாறன்;  

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலர்களாகப் பணிபுரிந்து வந்த திரு. பாலசுப்பிரமணியன் மற்றும் திரு. மோகன்; வேலூர் மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சங்கர்; விழுப்புரம் மாவட்டம், காணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. முருகன்; தியாகதுருகம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. நா. ரவிச்சந்திரன்;விருதுநகர் மாவட்டம், சூலக்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. மாரிராஜ்;  அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. மனுவேல்;

    

ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 3 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஸ்ரீனிவாசன்; தமிழ்நாடு சிறப்பு இலக்குப் படையில் பணிபுரிந்து வந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4 ஆம் அணியைச் சேர்ந்த திரு. க. மதன்ராஜ்;  9 ஆம் அணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. வடிவேல் முருகன் மற்றும் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. அஜித்குமார்;  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ராதாகிருஷ்ணன்;

    

சென்னை பெருநகரக் காவல், திருவான்மியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஆ. மருதுபாண்டி; ஜாம்பஜார் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. துரைராஜ்;  திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பா. முருகன்; புனித தோமையர் மலை ஆயுதப்படை பிரிவில் காவலர்களாகப் பணிபுரிந்து வந்த திரு. சுதன் மற்றும் திரு. ஆ. ஆசிஸ்குமார்; கோயம்புத்தூர் மாநகரம், செல்வபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சுரேஷ்; ஈரோடு மாவட்டம், பவானி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. பி. கோபாலகிருஷ்ணன்;

    

நாகப்பட்டினம் மாவட்டம், மணல்மேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ரா. கிருஷ்ணராஜ்குமார்;திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த திருமதி சகுந்தலா; திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ரஞ்சித்குமார்; விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. தனபால்; விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. அகிலன்; திருச்சுழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சாம் பிரேம் ஆனந்த்;

ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த மிகுந்த வேதனை அடைந்தேன்.உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன், எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: