புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசை விமர்சிக்க பிரதமர் மோடிக்கு என்ன தகுதி உள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் தொடங்கிவைத்த நெடுஞ்சாலை திட்டம் 2014ல் காங்கிரஸ் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. பல ஆண்டுக்கு முன் முடிவு செய்யப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஏமாற்றுகிறார் எனவும் நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.