சென்னை: சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சுந்தரம் என்பவர் அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்த உத்தரவிட கோரியும், நிர்வாகிகள் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டுமென கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான அணியே உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.