சென்னை: ரயில் பாதையில் உள்ள உயரழுத்த மின்கம்பி அருந்துதல் சென்னை தாம்பரம் மற்றும் கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில்சேவை 2 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மின்சார ரயில்கள் இயக்க பயன்படுத்தப்படும் கேபிள்கள் அறுந்து விழுந்தது. இதனால் முக்கிய வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தாம்பரத்தில் உள்ள 5 மற்றும் 6வது பிளாட் பாம் மூலம் சில ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் பேருந்து சேவை பெருமளவு குறைவாக இயக்கப்படும் சூழலில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.