சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இட நெருக்கடி காரணமாக, இது வேப்பேரிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு, பழைய அலுவலகத்தை புனரமைக்கும் பணிகள் நடந்தது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இது மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.