கொரோனா விதிமீறல் ரூ.13 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில், கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட, 14.21 லட்சம் நபர்களிடமிருந்து, 13 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொது சுகாதார சட்டத்தின்படி, முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் உள்ளிட்ட, கொரோனா தொற்றை பரப்பும் வகையில் செயல்படும் நபர்களிடமிருந்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, கொரோனா விதிமீறல்களில் ஈடுபட்ட, 14 லட்சத்து, 21 ஆயிரத்து, 350 நபர்களிடமிருந்து, 13 கோடியே, ஐந்து லட்சத்து, 58 ஆயிரத்து, 700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், ஒன்பது கோடி ரூபாய், தமிழக அரசின் கருவூலத்திற்கும், மீதமுள்ள தொகை, கொரோனா தடுப்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: