குஜராத்தில் மாநகராட்சி தேர்தல் விறுவிறு ஓட்டுப்பதிவு: நாளை வாக்கு எண்ணிக்கை

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில், அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநகராட்சிகள் பாஜவிடம் இருந்து வருகிறது. 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இது தவிர ஜூனாகத் மாநகராட்சியில் நடக்கும் 2 இடங்களுக்காக நடக்கும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாத், மாநகராட்சிக்கு உட்பட்ட நரன்புரா பகுதிவாக்குப்பதிவு மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். மாநில முதல்வர் விஜய்ருபானி தனது மனைவியுடன் ராஜ்கோட் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது.

Related Stories: