பாம்பன் ரயில் பாலத்தில் துருப்பிடித்துள்ள கர்டர்கள் மாற்றம்

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே மதுரை மண்டல கூடுதல் பொதுமேலாளர் மல்யா, மதுரை கோட்ட மேலாளர் லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டிராலியில் பாலத்தின் மைய பகுதிக்கு சென்று கப்பல் செல்லும் போது திறக்கும் ஷெர்ஜர் தூக்கு பாலத்தை பார்வையிட்டனர். கோட்ட மேலாளர் லெனின் கூறுகையில், ‘தூக்குபாலம் உறுதியாக இருக்கிறது. பாலத்தில் துருப்பிடித்த நிலையில் உள்ள ஐந்து இரும்பு கர்டர்களுக்கு பதிலாக விரைவில் புதிய கர்டர்கள் மாற்றப்படும்’ என்றார்.

Related Stories: