நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் குடும்பத்தகராறில் தந்தையை கள்ளத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற மகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேம்பதேவன்காடு பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் இவரது மகன் கருணாநிதி. கருணாநிதிக்கும் அவரது மனைவி புனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் புனிதா கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என கூறி கருணாநிதி தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் இதுகுறித்து பன்னீர்செல்வத்திடம் நேற்று கருணாநிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி உரிமம் பெறாமல் வைத்திருந்த துப்பாக்கியால் தந்தையை சுட்டுக்கொள்ள முயன்றார். துப்பாக்கி குண்டுகள் குறி தவறி அருகில் இருந்த தண்ணீர் டேங்கில் பாய்ந்தது. அப்போது உயிர்தப்பிய தந்தை பன்னீர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மகன் கருணாநிதி போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …
The post குடும்பத்தகராறில் தந்தையை கள்ளத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது appeared first on Dinakaran.
