ஆவடி: ஆவடி அடுத்த மிட்டனமல்லி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வர்க்கீஸ்(53). ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெர்சம்மாள்(51). இவர்களுக்கு அமிர்தஜான்(24). என்ற மகனும், ஆஸ்பி(21) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், 16ம் தேதி மதியம் வர்க்கீஸ் தனது மனைவி, மகனுடன் வீட்டில் சாம்பார் சாதத்துடன், பீன்ஸ், கேரட் பொறியல் சாப்பிட்டுள்ளார். மேலும், மகள் ஆஸ்பி, உடல் நலக்குறைவு காரணமாக சாம்பார் சாதம் சாப்பிடவில்லை. அதற்கு பதிலாக, தயிர்சாதம் சாப்பிட்டுள்ளார். மாலை மூவரும் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதனை பார்த்த, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.