மதுரவாயலில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் பூட்டை திறந்து 3.2 லட்சம் கொள்ளை

பூந்தமல்லி. மதுரவாயல் ஓடமா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் (30). இவர், நேற்று முன்தினம் காலை, தனது மனைவியுடன் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டார். அப்போது, வீட்டை பூட்டிவிட்டு சாவியை வெயியே உள்ள மறைவிடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.  வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய தம்பதி, கதவை திறந்து உள்ளே சென்றபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த  சீட்டு பணம் 3.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.  முதற்கட்ட விசாரணையில், வீட்டின் சாவியை வைக்கும் இடத்தை நோட்டமிட்ட மர்ம  நபர்கள், ஆள் இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை திறந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: