சென்னை: இந்தியன் ஆயில் நிறுவன தென்மண்டல செயல் இயக்குநராக சைலேந்திரா பொறுப்பேற்பு கொண்டார். தென்மண்டலம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முக்கியத் துறைகளான மனிதவளம், நிதி, எல்பிஜி-எரிபொருள் லாஜிஸ்டிக்ஸ், ஒப்பந்தங்கள், பாதுகாப்பு, விமானம் சார் துறை மற்றும் தரக் கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு இந்த வட்டாரத்தின் பொறுப்பாளராக இருக்கும் சைலேந்திரா மேற்குறிப்பிட்ட ஐந்து தென்மாநிலங்களுக்கான பெட்ரோலிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி சார்ந்த துறையில் தம்முடைய நீண்ட நெடிய பணிக்காலத்தில் ஆட்டோ எல்பிஜி நிலையங்கள் பற்றிய விரிவான கொள்கைகள் உருவாக காரணமாக இருந்தவர்.