தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணி.: பிப். 25-ம் தேதி 45 கம்பெனி துணை ராணுவப்படை தமிழகம் வருகை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முதற்கட்டமாக 45 கம்பெனி படையினர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

எனவே 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. தமிழகம் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதால் அதற்கான பணிகளை அரசியல் கட்சியல் இப்போதே தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது, தேர்தல் பிரசாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் அரங்கேறி வருகிறது.

அதேசமயம், தேர்தலுக்காக ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையமும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்று பல பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பிப்ரவரி 25-ம் தேதி 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: