உன்னாவ்: உத்தரப் பிரதேசத்தில் வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 தலித் சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பாபூரா கிராமத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயதுடைய 3 சிறுமிகள் வயலில் கால்நடைகளை மேய்ப்பதற்காக நேற்று முன்தினம் சென்றனர். மாலை வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் சிறுமிகளை தேடத் தொடங்கினார்கள். அப்போது வயலில் கட்டிப் போட்ட நிலையில் மூன்று சிறுமிகளும் மயங்கி கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.