சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரைவீரமணி மனைவி கனிமொழி சார்பில் சைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் நேற்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் துரைவீரமணி வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனது கணவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.எம்.மூர்த்தி தோல்வியடைந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி அயப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தெரு, செல்வி மஹால் அருகில் எம்.எம்.மூர்த்திக்கும் ஏற்கனவே அவரோடு நெருங்கிய தொடர்புடைய நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டனர்.