உலகநாடுகள் எல்லாமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வச்சிருந்தாலும், நம்ம இந்தியாவில மட்டும் ஏனுங்க இதுக்கு வழியே இல்லை? என்று பாமர மக்களையும் புலம்ப வைத்திருக்கிறது சமீபகாலத்திய விலை உயர்வு. விர் என ஏறும் பெட்ரோல் விலை ஏற்றத்தை கண்டிச்சு சைக்கிள் ஓட்டும் போராட்டம், மாட்டுவண்டி ஓட்டும் போராட்டம், கட்டை வண்டி ஓட்டும் போராட்டம் என்று திசைக்கொரு போராட்டங்களால் இந்தியாவும், தமிழகமும் திகைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் இருந்து எதிர்ப்பை பதிவு பண்ணிகிட்டே இருக்காங்க. இதில் ஒரு சில அமைப்புகள் தேர்தல் என்னும் அஸ்திரத்தையும் கையில் எடுத்திருக்காங்க. இந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் சார்பில் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.