இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்கல்: தா.மோ.அன்பரசன் அறிக்கை

காஞ்சிபுரம்: இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, காஞ்சி வடக்கு மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் நலத்திட்டங்கள் வழங்கல் நடைபெறும் என மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வரும் 28ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதிவரை காஞ்சி வடக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

28ம் தேதி திருப்போரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி, மார்ச் 2ம் தேதி பல்லாவரத்தில் திருச்சி சிவா, 3ம் தேதி ஆலந்தூரிலும், 4ம் தேதி ஸ்ரீபெரும்புதூரிலும் நாஞ்சில் சம்பத், 5ம் தேதி தாம்பரத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி, 6ம் தேதி செங்கல்பட்டில் கோ.வி.செழியன், ஈரோடு இறைவன் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்துகொண்டு பேசுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட செயலாளர்கள் இந்த தொடர் பொதுக்கூட்டங்களை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வதுடன், பொதுக்கூட்ட மேடையிலேயே நல உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: