புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஆளுநரின் செயலாளரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம் அளித்துள்ளனர். புதுச்சேரியில், எம்.எல்.ஏ.க்கள் மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 2 பேரின் ராஜினாமாவை தொடர்ந்து, பெரும்பான்மை பலத்தை நாராயணசாமி தலைமையிலான அரசு இழந்தது. ஆனாலும், தனது அமைச்சரவை ராஜினாமா செய்யாது என்று நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்தார். இந்த நிலையில், கவர்னர் கிரண்பேடி திடீரென மாற்றப்பட்டு தெலங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது. புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தற்போது திமுக மற்றும் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது.