விடியலை நோக்கி ஸ்டாலின் பைக் பேரணி திமுகவை சேர்ந்த ஆ.ராசா பி.கே.சேகர்பாபு மீது வழக்கு: 3 போலீஸ் நிலையங்களில் பதிவு

சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘விடியலை நோக்கி ஸ்டாலின்’ என்ற பெயரில் நேற்று முன்தினம் துறைமுகம் தொகுதிக்க உட்பட்ட முக்கிய பகுதிகள் முழுவதும் பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பைக்கில் சென்று  பூக்கடை, கொத்தவால்சாவடி, யானைக்கவுனி, ஏழுகிணறு, முத்தியால்பேட்டை, மண்ணடி ஆகிய பகுதிகள் வழியாக பேரணியாக சென்று கொடியேற்றி பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பைக்கில் பேரணியாக சென்றதாக ஆ.ராசா, பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மீது பூக்கடை, யானைக்கவுனி, முத்தியால்பேட்டை ஆகிய காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: