கம்பம்: கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்தவர் சம்ஸ் (38), டிரைவர்.இவர், கடந்த 2010ல் நடந்த சாலை விபத்தில், தனது இடது காலில் தொடை வரை இழந்தார். 85 சதவீதம் ஊனம் என அதிகாரிகள் அளித்த சான்றுடன், கடந்த 2017ல் தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.வாகனம் இல்லாததால் கட்டைக் கால்களுடன், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று வருகிறார்.இதனால், தொடைப்பகுதி முழுவதும் புண்ணாகி ரத்தம் வழிகிறது.