சென்னை: நீதிபதிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுயை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் தன்னை ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அவர் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதியும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி அவர் ஒய்வு பெற்றார்.