தூத்துக்குடி, நெல்லை, தென்காசிக்கு முதல்வர் எடப்பாடி 3 நாள் சுற்றுப்பயணம்

சென்னை: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 6வது கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். அதன்படி 17ம் தேதி (நாளை) தூத்துக்குடி மாவட்டத்திற்கும், 18ம் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், 19ம் தேதி தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், பிரமுகர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளை சந்திப்பதுடன் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேசுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: