கோகுல மக்கள் கட்சிக்கு புல்லாங்குழல் சின்னம்

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வர உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட திட்டமிட்டுள்ள கோகுல மக்கள் கட்சி, தங்களுக்கு புல்லாங்குழல் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சியின் மாநில தலைவர் எம்.வி.சேகர் கடிதம் எழுதி இருந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று, கோகுல மக்கள் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு புல்லாங்குழல்’ சின்னம் ஒதுக்கி உள்ளதாக கட்சி தலைவருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் கோகுல மக்கள் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: