சென்னை மாநகராட்சியில் வருவாய் துறை தலைவர் பதவி பெயர் மாற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த 2009ம் ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு பதவிகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதன்படி நல அலுவலர் பதவி, மாநகர நல அலுவலராகவும், சுகாதார அலுவலர் பதவி மாநகர சுகாதார அலுவலராகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் வருவாய் துறையின் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. வருவாய் துறையினர் தலைவர் பதவி வருவாய் அலுவலர் என்ற பெயரில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய் அலுவலர் பதவியை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இதன்படி வருவாய் அலுவலர் பதவியை மாநகர வருவாய் அலுவலராக பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது வருவாய் அலுவலராக உள்ள சுகுமார் சிட்டி பாபு, இனிமேல் மாநகர வருவாய் அலுவலர் என்ற பெயரில் பணியாற்றுவார்.

Related Stories: