மக்கள் குறைதீர் கூட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசாணிமங்கலம் கிராமத்தில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் உத்திரமேரூர், வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கம், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 41 மனுக்கள் பெறப்பட்டது .இதில் 23 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 18 மனுக்கள் பரிசீலினைக்கு அனுப்பட்டது. நிகழ்ச்சியில் அரசாணிமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Related Stories: