நாகர்கோவில்: காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் கடற்கரைகள் பகுதிகள், பூங்காக்களில் போலீசார் கண்காணித்தனர். ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர் தினத்துக்கு எதிர்ப்புகளும் உள்ளன. இந்த நிலையில் காதலர் தினமான இன்று, பொது இடங்களில் சுற்றும் காதல் ஜோடிகளை பிடித்து திருமணம் செய்து வைப்போம் என சில அமைப்புகள் எச்சரித்து இருந்தன. இதையடுத்து சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குதுறை பீச், முட்டம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணித்தனர். நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.