டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானின் புகுஷிமா பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 4.13 மணியளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ள இந்த நில அதிர்வின் மையமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 50 கிமீ ஆழத்தில் இருந்துள்ளது. புகுஷிமா மற்றும் மியாகி எல்லைப்பகுதிகளில் இந்த நில அதிர்வானது நான்கு புள்ளிகள் வரை உணரப்பட்டுள்ளது. ஆனால் இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.