காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். சமையல் நிறுவன கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்த முருகன், பாக்யராஜ், ஆறுமுகம் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா உணவு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் இருந்து சிப்காட்டில் உள்ள பல கம்பெனிகளுக்கு உணவு பரிமாறப்படுகிறது. இந்த நிலையில், அந்த உணவு நிறுவனத்தில் இருக்கும் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த நிறுவனத்தின் உரிமையாளர் 3 துப்புரவு பணியாளர்களை அழைத்திருக்கிறார். இன்று காலை முருகன், பாக்கியராஜ், ஆறுமுகம் ஆகிய 3 பேரும் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.