சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9.05 கீ.மீ.-க்கு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளது. வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவையை பெண் ஓட்டுனர் ரீனா இயக்கினார். சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-வது அகல ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ. 293.40 கோடியில் கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-வது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.