சென்னை: விவசாய சங்க தலைவரை கைது செய்தது காட்டுமிராண்டித்தனமானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக வீராநந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கீரனை அடித்து இழுத்து சென்று அராஜகமாக கைது செய்துள்ள அதிமுக ஆட்சிக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்றேன்.“விவசாயி” என்று வேடம் போட்டு, நகர்வலம் வந்து கொண்டே தனக்கு கீழ் உள்ள காவல்துறையை விட்டு விவசாய சங்க தலைவரை அராஜகமாக கைது செய்திருக்கும் பழனிசாமி, மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துள்ளார்.