திண்டிவனம்: திண்டிவனத்தில் அரசு ஒப்பந்ததாரரும், அதிமுக பிரமுகருமான குமார் என்பவர், பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு அப்பகுதியில் அலுவலகமும் உள்ளது. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை டெண்டர்கள் எடுத்து பணிகளை செய்து வருகிறார். மேலும் இவருக்கு திண்டிவனம் அருகே எம்.சாண்ட் குவாரியும் உள்ளது. இவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினர். குமார் மனைவி கல்யாணி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்.