தமிழக மீனவர்கள் விவகாரம்: இலங்கைக்கு கண்டனம்: ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 18ம் தேதி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா மிகமிக கடும் கண்டனம் தெரிவித்தது.

அதன் விளைவாக, விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். தற்போது இலங்கை பிடியில் தமிழக மீனவர்கள் யாருமில்லை. அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 62 படகுகள் மட்டும் இலங்கை பிடியில் உள்ளது. இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories: