அனைத்து அதிமுக எம்எல்ஏக்களுக்கும் கூவத்தூரில் வைத்து ஊத்திக் கொடுத்தவர் டிடிவி. தினகரன் என அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கரமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். திண்டிவனத்தில் நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி: சசிகலா தனது காரில் அதிமுக கொடி கட்டியது தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும். அதிமுகவை கைப்பற்றுவோம் போவோம் என்று இன்றைக்கு வீரசூரர் ஒருத்தர் சொல்லிக்கிட்டிருக்கிறார். நீ எங்க அதிமுகவை கைப்பற்றுவது.. அது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை. உங்களை காப்பாத்திக்கோங்க.. இந்த தினகரனிடம் இருந்து. தினகரன் சொல்வார், சிலீப்பர் செல்.. சிலீப்பர் செல்.. எந்த சிலீப்பர் செல் நாங்கள் ஓப்பன் செல்லே வச்சுருக்கோம். அந்த ஓப்பன் செல் இந்த வெத்துவேட்டு தினகரன் தான். அவங்கிட்ட இருந்து சசிகலாவையும், அந்த குடும்பத்தையும் காப்பாதிக்கங்க. ஏன்னா, இந்த டிடிவி.தினகரனை நம்பி தான் சசிகலா இந்த கட்சி, இந்த ஆட்சி எல்லாத்தையும் ஒப்படைச்சிட்டு போனாங்க..