பெங்களூரு: பெங்களூரு சுப்பிரமணியநகர் பகுதியில் கடந்த பிப்.2ம் தேதி ஏ.டி.எம்மிற்கு பணம் நிரப்ப சென்றிருந்தபோது, தனியார் ஏஜென்சியை சேர்ந்த வேன் டிரைவர், ரூ.64 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணத்துடன் தப்பியோடி விட்டார். உடன் சென்ற ஊழியர் ஏ.டி.எம்மில் பணம் நிரப்புவதற்காக சென்று திரும்பி வந்து பார்த்தபோது, பணம் வைத்திருந்த வேன் மாயமாகியிருந்தது. உடனே அவர்கள் சுப்பிரமணிய நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில் டிரைவர் மண்டியா மாவட்டம் கே.ஆர் பேட்டை தொட்டயாச்சனஹள்ளி பகுதியை சேர்ந்த யோகேஷ். தனியார் ஏ.டி.எம்களுக்கு பணம் நிரப்பும் பொறுப்பை ஏற்றுள்ள ஏஜென்சியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தினமும் ஏ.டி.எம்மிற்கு வாகனத்தை இவர் தான் ஓட்டி செல்வார். பெங்களூரு தொட்டபிதரகல்லு பகுதியில் வசித்து வந்தார்.