திருப்பதி கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு திருமலை வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு   கொடுத்து வரவேற்றனர். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அர்ச்சகர்கள்   வேதாசீர்வாதம் செய்து சிறப்பு பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவரை நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர் மறுத்துவிட்டு புறப்பட்டார். முன்னதாக   கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் தரிசனம் செய்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டார்.

Related Stories: