சென்னை : அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வரும் அதிமுக நிர்வாகிகள்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், தியாகராய நகரில் தங்கி உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். கடந்தாண்டு பாலியல் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் நாகர்கோவில் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன். தாய், மகள் மீது பாலியல் குற்றம் புரிந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். பின் அதிமுகவிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது நினைவுக் கூறத்தக்கது.