சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள் அடங்கிய நூல்: பாப்புலர் ப்ரண்ட் இந்தியா வெளியிட்டது

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள் அடங்கிய நூல் பாப்புலர் ப்ரண்ட் இந்தியா சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்’ என்ற நூல் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி நூலை வெளியிட்டார்.  தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: பாஜ அல்லாத மதசார்பின்மை, ஜனநாயகம், அனைத்து தரப்பையும் உள்ளடக்கி வளர்ச்சி ஆகியவற்றின் மீது நம்பிக்கையுள்ள,  அரசியல் கட்சிகளின் கவனத்திற்கும் ‘தமிழக முஸ்லிம்களின் கோரிக்கைகள்’ கொண்டு செல்லப்பட்டு தேர்தல் கால அறிக்கையிலும், தேர்தலுக்கு பின்னுள்ள அவர்களின் செயல் திட்டங்களிலும் எமது கோரிக்கைகள் இடம்பெற செய்வதற்கான முதல் தொடக்கமே இந்நூல். இவ்வாறு அவர் கூறினார். இதில், மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், மாநில செயலாளர் நாகூர் மீரான், சென்னை மண்டல செயலாளர் அஹ்மத் முகைதீன் மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: