கொழும்பு : தமிழகத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள தீவுகளில் சீனாவின் மின்சக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு யாழ்ப்பாணம் அருகே காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை ரூ.87 கோடி செலவில் செயல்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தம் சீனாவைச் சேர்ந்த சினோசர் – இடெக்வின் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 50கிமீ தொலைவில் உள்ள நெடுந்தீவு, அனலைதீவு, நைனா தீவு ஆகிய தீவுகளிலேயே சீன நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.