ராஜீவ்காந்தி சாலையில் நந்தனா பேலஸ் உணவகம் திறப்பு

சென்னை: பெங்களூருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது 15 உணவகங்களில் சுவை மிகுந்த ஆந்திர உணவு வகைகளை வழங்கி வரும் நந்தனா பேலஸ், ஏகாட்டூர் ராஜீவ்காந்தி சாலையில் மெரினா மால் அருகே, தனது புதிய கிளையை தொடங்கி உள்ளது. அடையார் ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் இந்தியா பி.லிட் மேலாண் இயக்குனர் கே.டி.ஸ்ரீனிவாச ராஜா மற்றும் கே.டி.வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்னம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் புஷ்பா கந்தசுவாமி குத்துவிளக்கேற்றினர். நில உரிமையாளர் ரமேஷ், சாமுண்டீஸ்வரி, சங்கீதா மொபைல்ஸ் மேலாண் இயக்குனர் மற்றும் தலைவர் சுபாஷ் சந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இதுகுறித்து நந்தனா குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் டாக்டர் ஆர்.ரவிந்தர் கூறுகையில், ‘‘இங்கு உலக தரத்தில் உணவு வகைகள் கிடைக்கும். 200 பேர் அமரக்கூடிய  பார்ட்டி ஹால், பார்க்கிங் வசதியும்  உள்ளது,’’ என்றார்.

Related Stories: