தானியங்கி முறையில் சுத்தம் செய்ய பஸ் ஒன்றுக்கு 20: எஸ்இடிசி நிர்வாகம் உத்தரவு

சென்னை: தானியங்கி முறையில் சுத்தம் செய்வதற்கு பேருந்து ஒன்றுக்கு 20 மட்டுமே வழங்க வேண்டும் என ஓட்டுனர், நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘கோயம்பேடு பணிமனையில் புதிதாக தானியங்கி பேருந்து சுத்தம் செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பேருந்துகளை சுத்தம் செய்வதற்கு சொகுசு பேருந்துகளுக்கு 40ம், ஏசி பேருந்துகளுக்கு 75ம் ‘வே-பில்’ல் கழித்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய ரக தானியங்கி பேருந்து சுத்தம் செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதால், பேருந்துகளை இம்முறையில் சுத்தம் செய்வதற்கு பேருந்து ஒன்றிற்கு ₹20 மட்டுமே வழங்க ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்துமாறு கிளை மேலாளர்களுக்கும் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: