சிவகங்கை: விவசாயிகளுடன் மோதிய அரசு வென்றதாக வரலாறு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாஜகவுக்கு கட்டுப்பட்டு அதிமுக அரசு பொம்மைபோல் ஆடுவதாக விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாதவர் பிரதமர் நரேந்திர மோடி என விமர்சனம் செய்தார். மேலும் விவசாயிகள் கையை மடக்கி விட்டால் சன்னியாசிகள், சாமியார்கள் கூட பிழைக்க முடியாது.