சென்னை: பெங்களூரில் இருந்து சசிகலா இன்று சென்னை வருகிறார். இதனால் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து இன்று சென்னை வருகிறார். இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆயிரம் கார்கள் அணிவகுப்புடன் மிக பெரிய அளவில் வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக தமிழக எல்லையில் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன்பு ஜெயலலிதா சமாதியில் 3 மூன்று முறை அடித்து சபதம் எற்றுக்கொண்டார். அதன் பிறகு தான் அவர் பெங்களூரு சிறைக்கு சென்றார். இப்போதும் அவர் பெங்களூரில் இருந்து நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கட்டுமான பணி என காரணம் காட்டி ஜெயலலிதா நினைவிடத்தை அரசு தற்போது மூடியுள்ளது.